ரமலான் என்பது இஸ்லாமிய மதத்தில் ஐந்து அத்தியாவசியங்களில் (அல்லது தூண்களில்) ஒன்று. அதன் 30 நாட்களிலும், அதிகாலை முதல் சூரியன் மறையும் வரை இஸ்லாமியர்கள் உபவாசிக்க வேண்டும். அந்த நேரத்தில், அவர்கள் சாப்பாடு, பானங்கள், புகைப்பிடித்தல் மற்றும் பாலியல் உறவுகளைத் தவிர்க்க வேண்டும்.
பெண்கள் மதிய வேளை முழுவதும் நல்ல உணவு தயாரிப்பதில் செலவிடுவார்கள். சூரியன் மறையும்போது, குடும்பமாகக் கூடி உபவாசத்தை நிறைவு செய்வார்கள். பாரம்பரியமாக குடும்பத்தினர் தண்ணீர் குடித்து உபவாசத்தை முடிப்பார்கள். பின்னர் மூன்று காய்ந்த பேரீச்சம்பழங்களைச் சாப்பிட்டு, தொடர்ந்து நல்ல அறுசுவை உணவை உண்பார்கள். புதிய ரமலான் தொலைக்காட்சித் தொடரை பார்த்தபின், ஆண்கள் (சில பெண்களும்) வெளியில் காபி கடைகளுக்குச் சென்று, காபி அருந்தி, பின்னர் நள்ளிரவு வரை நண்பர்களுடன் நேரத்தை செலவிடுவார்கள். சமீப காலங்களில் அநேகர் இந்த உபவாசம் மாய்மாலமாக இருப்பதாலும், அந்தக் காலக்கட்டத்தில் அதிகரிக்கும் குற்ற எண்ணிக்கைகளினாலும், அந்த மாதம் முழுவதும் காணப்படும் கடுமையான மனநிலையினாலும் அதை நிறுத்தியிருந்தாலும், மற்றும் சிலர் அதேநேரத்தில் மதத்தைத் தீவிரமாக எடுத்துக்கொள்கிறார்கள். அநேகர் மாலைநேர ஜெபங்களுக்குச் சென்று, மற்ற சடங்குகளைச் செய்கிறார்கள். சிலர் (வேதாகமத்தில் பத்தில் ஒரு பங்கு உள்ள) குரான் முழுவதையும் படிக்கிறார்கள். இப்படி அவர்கள் உண்மையாகத் தேடும் நேரம் நம்மைப் பொறுத்தவரை அவர்களுக்காக ஜெபிக்கும் நல்லதொரு நேரமாகிறது.